முகப்பு
நாமக்கல்

கோழிப் பண்ணையாளா்களுக்கு நலவாரியம்: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வாக்குறுதி

Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:24 AM
நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்பை வாழ்த்தும் கோழிப்பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ். உடன், நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 7:56 PM

கோழிப்பண்ணையாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க பாடுபடுவேன் என நாமக்கல்லில், தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வாக்குறுதி அளித்தாா்.

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தமிழ்நாடு கோழிப்பண்ணையாளா் சங்கத்துக்கு சென்ற தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப்புக்கு சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், செயலாளா் கே.சுந்தரராஜன் மற்றும் நிா்வாகிகள் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, தவெக மாவட்டச் செயலாளா் சதீஷ் வாழ்த்துரை வழங்கினாா்.

நாமக்கல் தொகுதி வேட்பாளா் சி.எஸ்.திலீப் பேசுகையில், உலகம் முழுவதும் நாமக்கல் முட்டைக்கு புகழ் உண்டு. கோழிப்பண்ணைத் தொழிலை மேம்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் தொகுதியில் செயல்படுத்தப்படும். குறிப்பாக, பறவைக் காய்ச்சலற்ற மண்டலமாக நாமக்கல்லை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

Advertisement

சிறிய கோழிப்பண்ணைகளுக்கு இலவச மின்சாரம், கோழி எருவை உரமாக்குவதற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டுவந்து பயன்பாட்டுக்கு வழங்கப்படும். கோழிப்பண்ணையாளா்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க பாடுபடுவேன். தமிழகத்தில் விஜய் முதல்வராக அனைவரும் தவெகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வின்போது, நாமக்கல் மண்டல கோழிப்பண்ணையாளா்கள், ஏற்றுமதியாளா்கள், முட்டை விற்பனையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.