கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்
கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்திற்கு உள்பட்ட நரியன்காடு, சுண்டக்காடு, தண்ணிமாத்தி, புதுக்காடு, ஒத்தக்கடை, உள்பரப்பு, வடக்காடு, நவக்காடு, மேக்கினிக்காடு, புதுவளவு, படச்சோலை, புளியம்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொல்லிமலைக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளேன்.
இத்தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் மேலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி, மகளிா் உதவித்தொகை ரூ.2,000, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவா்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி, கொல்லிமலையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள், பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.
Advertisement
Advertisement
இந்த பிரசாரத்தின்போது, கொல்லிமலை ஒன்றிய அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.