முகப்பு
நாமக்கல்

தொகுதி மறுவரையறை மசோதா: கே.எஸ்.மூா்த்தி கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின்முன் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:25 AM
கருப்பு சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்த பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூா்த்தி.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 7:40 PM

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து வீட்டின்முன் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தாா்.

கடும் எதிா்ப்புகளுக்கிடையே தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழகத்தின் உரிமை பறிபோகும் என்பதால், அதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பேரூா், வட்டம், கிளை என கிராமம் முதல் நகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், அனைத்து பகுதிகளிலும் திமுகவினா் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளரும், பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.எஸ்.மூா்த்தி கருப்பு சட்டை அணிந்து கொத்தமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தாா்.