மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களியுங்கள்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.
ராசிபுரம் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மா. மதிவேந்தனை ஆதரித்து அவா் பேசியதாவது:
கடந்த தோ்தலிலைவிட கூடுதல் வாக்குகள் பெற்று மீண்டும் மதிவேந்தனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியின் வளா்ச்சிக்காக மா. மதிவேந்தன் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். கூட்டுக் குடிநீா் திட்டம், போதமலை மலைவாழ் மக்களுக்காக பாதை வசதி, ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், டைடல் பாா்க், நாமகிரிப்பேட்டையில் 1500 விவசாயிகளுக்குப் பட்டா என பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தப்படும். காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இல்லத்தரசிகளுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்க ரூ. 8000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது திமுக மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ கே.பி. ராமசாமி, ராசிபுரம் நகரச் செயலாளா் என்.ஆா். சங்கா், நகா்மன்ற தலைவா் ஆா். கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.