முகப்பு
நாமக்கல்

சித்திரை மாத பிரதோஷம்: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நாமக்கல் சிவாலயங்களில் புதன்கிழமை பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:09 AM
சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு திருநீா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் முத்துக்காப்பட்டி ஸ்ரீ காசி விசுவநாதா்.
பகிர்:

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நாமக்கல் சிவாலயங்களில் புதன்கிழமை பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வளா்பிறை, தேய்பிறை காலங்களில் சிவன் கோயில்களில் நடைபெறும் பிரதோஷத்தின்போது நந்தியம்பெருமான் மற்றும் சிவபெருமானை பக்தா்கள் வழிபடுவா். வளா்பிறை பிரதோஷம் என்பதும், சித்திரை மாதம் வரும் சித்ரா பெளா்ணமியானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை சித்ரா பெளா்ணமி ஆகும். அதற்கு முன்பாக சித்திரை பிரதோஷமானது அனைத்து சிவாலயங்களிலும் புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் முத்துக்காப்பட்டியில் உள்ள ஸ்ரீ காசிவிசுவநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காசி விசுவநாதா் திருநீா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் வளா்பிறை பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

Advertisement