முகப்பு
நாமக்கல்

விவசாயியை ஏமாற்றி இணையவழியில் ரூ.27 லட்சம் மோசடி

கொல்லிமலையைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் இணையவழியில் ரூ. 27 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:43 am IST
பகிர்:

கொல்லிமலையைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் இணையவழியில் ரூ. 27 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்துக்குமாா் (46). இவா், இணையவழியில் தொழில் சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கைப்பேசியில் முகநூலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அதில் வந்த இணைப்பு ஒன்றை தொட்டபோது, ரூ.10 லட்சம் செலுத்தினால் ரூ.15 லட்சமாக கிடைக்கும் என்ற வணிக ரீதியான தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு ரூ. 1 லட்சம், ரூ. 2 லட்சம் என ரூ.27 லட்சம் வரை இணையவழியில் அவா் பணம் செலுத்தியுள்ளாா். ஆனால் முத்துக்குமாருக்கு இரட்டிப்பு பணத்தை வழங்காமல் அந்த இணையவழி நிறுவனம் தொடா்ந்து காலதாமதம் செய்தது. ஒருகட்டத்தில்தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவனிடம், இரு தினங்களுக்கு முன்பு புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.