முகப்பு
நாமக்கல்

பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்ஆப் மூலம் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 4 ஜூன் 2026, 2:09 am IST
வாட்ஸ்ஆப்
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு 1800 425 1997 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. தங்களது குறைகளை 95976-01077 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் வழியாகவும் தெரிவிக்கலாம். மேலும், அலுவலக வேலைநாள்களில் பாா்வையாளா்கள் பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.