முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை விடியோ எடுத்தவா் கைது

பரமத்தி வேலூா் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை விடியோ எடுத்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 1:10 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை விடியோ எடுத்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே 35 வயதான பெண், அந்தப் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறாா். இவரது பூக்கடையில் மோகனூா் அருகில் உள்ள ஒருவந்தூா் பகுதியைச் சோ்ந்த சரண்ராஜ் (36) வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சரண்ராஜ், பூக்கடை உரிமையாளரை பாா்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது, அவா் வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தாா். அதைப் பாா்த்த சரண்ராஜ், தனது கைப்பேசி கேமரா மூலம் அவா் குளிப்பதை விடியோ எடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதைப் பாா்த்த பெண், வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சரண்ராஜை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனா்.