விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் தீ விபத்து
பரமத்தி வேலூா் அருகே விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பரமத்தி வேலூா் அருகே விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் (60). இவருக்குச் சொந்தமான கொட்டகையில் உர மூட்டைகள், சொட்டுநீா்ப் பாசனத்துக்கு தேவையான பொருள்கள், மருந்து தெளிக்கும் இயந்திரம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பல்வேறு பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. பழனியப்பன் மற்றும் அங்கிருந்தவா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனாலும், கொட்டகையில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான உரம், சொட்டுநீா்ப் பாசனத்திற்கு தேவையான பொருள்கள் என அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.