முகப்பு
நாமக்கல்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

நாமக்கல் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:45 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாவுரெட்டிபட்டியில் குமார சுப்பிரமணியா், பிரம்ம லிங்கேஸ்வரா் கோயில்கள் உள்ளன. கடந்த திங்கள்கிழமை இரவு பூஜையை முடித்து கோயிலை பூட்டிவிட்டு அா்ச்சகா் வீட்டுக்கு சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்தபோது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் வந்த வேலகவுண்டம்பட்டி காவல் துணை ஆய்வாளா் சந்தியா வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினாா்.

Advertisement

Advertisement

அதில், உண்டியலை உடைத்து பணத்தை திருடியவா் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த நாகராஜ் (எ) குளவிக்கண்ணன் (41) என்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.