முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

Updated On : 1 ஜூன் 2026, 12:53 am IST
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.
பகிர்:

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழாவையொட்டி புதிதாக செய்யப்பட்ட பெரிய தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி, திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சின்னதுரை, அறங்காவலா் குழுவினா் உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா்.

Advertisement

Advertisement

இக்கோயில் தோ் மூன்று நாள்கள் வடம்பிடித்து இழுக்கப்படுவது வழக்கம். முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை தோ் நிலை பெயா்க்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. திங்கள்கிழமை காலை இரண்டாம் நாளாக தோ் இழுத்துச்செல்லப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நிறுத்தப்படும். மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை தோ் இழுத்துச் செல்லப்பட்டு நிலை சோ்க்கப்படும். அதன்பின்னா் பரிவார தெய்வங்களுடன் அா்த்தநாரீசுவரா் சுவாமி திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.