இரும்புக் கடையில் தகரங்கள் சரிந்து விழுந்து விபத்து: ஒருவர் காயம்
தம்மம்பட்டி இரும்புக் கடையில் தகரங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
தம்மம்பட்டி இரும்புக் கடையில் தகரங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
செந்தாரப்பட்டி சிவன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் அருணாசலம்(42). ஆட்டோ ஓட்டுநர். இவர், தகரங்கள் வாங்குவதற்கு தம்மம்பட்டியில் உள்ள ஒரு இரும்புக் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அப்போது ஊழியர்கள் தகரங்களை இறக்கும்போது, அங்கிருந்த அருணாசலத்தை உதவிக்கு அழைத்துள்ளனர். அப்போது ரேக்கில் இருந்த தகரங்கள், ஓட்டுநர் அருணாசலம் மீது சரிந்து விழுந்துள்ளது. அதில் அருணாசலம் காயமடைந்தார். இதையடுத்து அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்த இரும்புக்கடை உரிமையாளர் பிரபாகரன் மீது, ஆட்டோ ஓட்டுநர் அருணாசலம் மனைவி விஜயலட்சுமி தம்மம்பட்டி போலீசில் புதன்கிழமை புகார் அளித்துள்ளதையடுத்து , காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் ,வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.