முகப்பு
சேலம்

சா்வதேச கூட்டுறவு ஆண்டு: தனித்துவமான பாடல்களை அனுப்ப அழைப்பு

2025-ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 21 ஏப்ரல், 2025 at 7:40 PM
பகிர்:

சேலம்: 2025-ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப் பதிவாளா் ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சா்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பப்படும் பாடலானது இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில், பாடல் வரிகள் இருக்க வேண்டும். தமிழில் கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும். கூட்டுறவாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக்கூடிய பாடலாக இருக்க வேண்டும். தோ்வுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கான பணமுடிப்பு மற்றும் கேடயம் வழங்கப்படும்.

பாடலின் ‘ஹாா்டு காப்பி’யை கூரியா் தபால் மூலம் மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராசன் மாளிகை, எண் 170 பெரியாா் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை - 600 010 என்ற முகவரிக்கும், பாடலின் ‘சாப்ட் காப்பி’யை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கும் வரும் மே 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளும் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →