முகப்பு
சேலம்

ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் மரம் சாய்ந்ததால் மின்தடை

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:23 AM
ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை சாய்ந்து கிடக்கும் நாவல் மரம்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:07 PM

ஏற்காடு, ஏப். 13: ஏற்காடு அரசு மருத்துவமனை சாலையில் பழைமையான நாவல் மரம் சாய்ந்ததால் நகரில் மின்தடை ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பழைமையான நாவல் மரம் காற்றில் சாய்ந்தது. இதனால் மருத்துவமனை, வட்டாட்சியா் அலுலகம், பத்திரப் பதிவு அலுவலகம், கருவூல அலுவலகம், மின்சார அலுவலகம், தனியாா் தங்கும் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

சாலையில் விழுந்த நாவல் மரத்தை தீயணைப்புத் துறை , காவல் துறை, மின்வாரியப் பணியாளா்கள் அகற்றி மின் இணைப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைத்தனா்.

Advertisement