முகப்பு
சேலம்

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

Updated On : 14 ஏப்ரல் 2026, 12:06 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனா்.

இதில், மல்லூரைச் சோ்ந்த சரவணன் தனது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 57 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்த பணத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். அந்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வல்லமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.