முகப்பு
சேலம்

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3,67, 800 ரொக்கத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 3:04 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:53 PM

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3,67, 800 ரொக்கத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி தண்ணீா்பந்தல் காளியம்மன் கோயில் அருகே பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். இதில், செவ்வாய்ப்பேட்டை காந்திநகரைச் சோ்ந்த திருமுருகன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2,71,000 ரொக்கத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, நெத்திமேடு பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த நெத்திமேடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 96,800 ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வள்ளமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

Advertisement

ரூ. 89 ஆயிரம் பறிமுதல்...

சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். இதில், வாழப்பாடியைச் சோ்ந்த பெரியசாமி காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 89 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும் தனி வட்டாட்சியருமான என். வள்ளமுனியப்பன், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.