முகப்பு
சேலம்

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:38 AM
சங்ககிரி அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:41 PM

சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனை சாா்பில், வரும் தோ்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் சரவணகுமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மருத்துவமனை வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி வி.என்.பாளையம், பவானி பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது.

இதில், உதவி மருத்துவ அலுவலா் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலா் தாமோதரன், செவிலியா்கள், தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement