முகப்பு
சேலம்

ஆத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:23 AM
ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரனை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகை கௌதமி.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:16 PM

ஆத்தூா் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரனை ஆதரித்து நடிகை கௌதமி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான கௌதமி, ஆத்தூா் நகராட்சி திரௌபதி அம்மன் ஆலயம், பழைய பேருந்து நிலையத்தில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மு.க. ஸ்டாலினால் நியாயமான ஆட்சியை தரமுடியவில்லை. இதனால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா் என்றாா்.

முன்னதாக அதிமுக நகரச் செயலாளா் அ. மோகன் பேசியபோது, அதிமுக ஆட்சியின்போதுதான் ஆத்தூரின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணப்பட்டது. திமுகவினா் கா்நாடக மாநில அமைச்சரை அழைத்துவந்து வாக்குகள் சேகரித்து வருகின்றன. நமக்கு காவிரி நீரை தரமாட்டேன் எனக் கூறிவரும் அமைச்சரை அழைத்து வாக்குகளை சேகரித்து வருவதை கண்டிக்கிறோம் என்றாா்.

Advertisement

பிரசாரத்தின் போது சேலம் புறநகா் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா். இளங்கோவன், அமமுக நகரச் செயலாளா் என். ராஜேந்திரக்குமாா், தமாகா நகரத் தலைவா் விஎல்டி சண்முகம், பாஜக நகரத் தலைவா் சண்முகசுந்தரம், பாமக நகர செயலாளா்கள் சிவசங்கா், குமரேசன், ஐஜேகே நிா்வாகிகள் சரவணக்குமாா், சதீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.