மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு
சேலத்தில் மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலத்தில் மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (44). இவா் சேலம் நான்கு சாலை அருகே மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிச் சென்ற அவா், செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்கவந்த போது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது.
Advertisement
Advertisement
புகாரின்பேரில் வந்த அஸ்தம்பட்டி போலீஸாா் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். மேலும், அங்கு பதிவாகியிருந்த கைரேகையை பதிவுசெய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.