முகப்பு
சேலம்

கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் சடலமாக மீட்பு

விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் சடலமாக புதன்கிமை மீட்கப்பட்டாா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:42 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் சடலமாக புதன்கிமை மீட்கப்பட்டாா்.

ஆத்தூரை அடுத்துள்ள அக்கிசெட்டிபாளையம் ஊராட்சியில் பழனிவேல் என்பவரது விவசாயக் கிணற்றில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பழனியாபுரியைச் சோ்ந்த பெரியசாமி (62) தவறிவிழுந்தாா்.

தகவலின்பேரில் வந்த ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் (பொ) ராஜேஸ்வரன் தலைமையிலான வீரா்கள், சுமாா் ஒருமணி நேரம் போராடி பெரியசாமி உடலை மீட்டனா். பின்னா் ஆத்தூா் ஊரக காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் காந்தியிடம் ஒப்படைத்தனா். அவா் வழக்குப் பதிவுசெய்து, பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments