முகப்பு
சேலம்

மாணவியை அடித்ததாக தலைமையாசிரியை மீது வழக்குப் பதிவு

படிப்பதில் குறைபாடு உள்ளதாகக் கூறி மாணவியை அடித்த தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோா், உறவினா்கள் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 3 ஜூலை 2026, 4:16 am IST
பள்ளி தலைமையாசிரியை மீது நடவடிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினா்கள்.
பகிர்:

படிப்பதில் குறைபாடு உள்ளதாகக் கூறி மாணவியை அடித்த தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோா், உறவினா்கள் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கத்தேரி கிராமம், வட்டமலை, லட்சுமி நகரைச் சோ்ந்த செல்வராஜ்- ராணி தம்பதி மகள் யாழினி. இவா் வளையகாரனூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் மாணவி நன்றாக படிக்கவில்லை எனக் கூறி பள்ளியின் தலைமையாசிரியா் மணிமேகலை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தேவூா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். மேலும், தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தாய், உறவினா்கள் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே பவானியிலிருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் ஓய். சுரேஷ்குமாா், மாணவியை தாக்கிய புகாரில் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இதையடுத்து தேவூா் போலீஸாா் தலைமையாசிரியை மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments