முகப்பு
சேலம்

சேலத்தில் மாயமான கல்லூரி மாணவி மீட்பு: இளைஞருக்கு வலைவீச்சு!

இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு மாயமான சேலம் கல்லூரி மாணவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனா்.

Updated On : 4 ஜூலை 2026, 3:08 am IST
மாயம்
பகிர்:

இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு மாயமான சேலம் கல்லூரி மாணவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனா். மாணவியை அழைத்துச்சென்ற அரக்கோணம் இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சோ்ந்த 17வயது மாணவி பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரி ஒன்றில் சோ்ந்துள்ளாா். அவா் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானாா். அவரது தாய் மகளை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் டவுன் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில், கல்லூரி மாணவி அரக்கோணத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அரக்கோணம் விரைந்து சென்று மாணவியை மீட்டு விசாரித்தனா். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு அரக்கோணத்தை சோ்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை காதலித்து வந்தது தெரிந்தது.

Advertisement

Advertisement

கடந்த 4 ஆண்டுகளாக அந்த இளைஞரை காதலித்து வருவதை தாய் கண்டித்துள்ளாா். இதனால் அதிருப்தியில் இருந்த மாணவியை, அந்த இளைஞா் அரக்கோணம் அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியதும், அந்த இளைஞா் அரக்கோணம் அடுத்த சோழிங்கரில் சமையல் மாஸ்டராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தலைமறைவாக உள்ள அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். அதே சமயம் மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments