முகப்பு
சேலம்

ஏற்காட்டில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

Updated On : 7 ஜூலை 2026, 1:21 am IST
முறையான குடிநீா் விநியோகம் கோரி ஏற்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சேலம் - ஏற்காடு பிரதான சாைலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், ஏற்காடு கிராம ஊராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இவற்றில் கோவில்மேடு பகுதியில் கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகிக்காததால் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்தனா்.

அவா்களுக்கு முறையான பதில் கிடைக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் காவல் துறை, அரசு அலுவலா்கள்அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, முறையாக குடிநீா் விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments