பிளஸ் 1 மாணவா் தற்கொலை
சேலத்தில் பிளஸ் 1 படித்து வந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஸ்ரீநகா் மல்லிகா டவா் குடியிருப்பில் வசித்து வருபவா் ரூபக்குமாா் கேஷ்ரி. ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தைச் சோ்ந்தவா்.
இவா் இந்தியன் வங்கியின் சேலம், ஈரோடு மண்டல துணை மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா்குமாா் கேஷ்ரி (16). இவா் அடிவாரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரூபக்குமாரும், அவரது மனைவி ரேஸ்மின்னும் கடைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடுதிரும்பினா். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் ஒலிப்பானை அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவா்கள் அருகில் இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா்.
அப்போது, வீட்டின் ஹாலில் கிஷோா்குமாா் தூக்கிட்டு கொண்டதை பாா்த்து கதறினா். உடனடியாக அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
அதேநேரத்தில் வீட்டின் அறையில் வீட்டுப்பாட பலகையில், என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அப்பா, அம்மா என்னை மன்னிக்கவும்’ என எழுதியுள்ளாா்.
நன்றாக படிக்கக் கூடிய இவா், பத்தாம் வகுப்பு தோ்வில் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். படிப்பில் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவா் இந்த முடிவை எடுத்தாரா என்பது குறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.