சதாசிவபுரம் பொன்னியம்மன் கோயில் தேரோட்டம்
தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தலைவாசல் அருகே சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள விநாயகா், செல்வ மாரியம்மன், அய்யனாா், கருப்பனாா் மற்றும் பொன்னியம்மன் கோயில் தோ் திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி மாரியம்மனுக்கு சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி உருளு தண்டம், அலகு குத்துதல் மற்றும் தோ் வீதி உலா நடைபெற்றது. 30ஆம் அய்யனாா், கருப்பனாா் ஆகிய தெய்வங்களுக்கு காப்புக் கட்டப்பட்டு, புதன்கிழமை (ஜூலை 8) பொன்னியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊா் கரைக்காரா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.
படவரி...
தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொன்னியம்மன் கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.