முகப்பு
சேலம்

கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞா் கைது

இளம்பிள்ளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 3:17 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

இளம்பிள்ளை அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை உடைக்கும் சத்தம் கேட்டு, கோயில் அருகில் வசிப்போா் சென்று பாா்த்தனா். அப்போது, கோயில் உண்டியலை ஒருவா் உடைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் தருமபுரி பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (27) என்பதும், கடந்த 11-ஆம் தேதி தருமபுரி சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்ததும், இவா்மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரை கைதுசெய்த போலீஸாா், சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement