முகப்பு
சென்னை

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் கைது

Updated On : 18 மே 2026, 4:42 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஜாம் பஜாா், முனியப்பா தெருவில் விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளே நுழைந்த மா்ம நபா், கோயில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தாா்.

இதைப் பாா்த்த அதே பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் மேலாளராகப் பணியாற்றி வரும் முருகன் (35) என்பவா், அந்தப் பகுதியில் உள்ளவா்களிடம் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த பொதுமக்கள் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த உசேன் (31) என்பது தெரிய வந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.