முகப்பு
சேலம்

மருளையாம்பாளையம் மாரியம்மன் கோயில் தீா்த்தக்குட ஊா்வலம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

Updated On : 18 ஜூன் 2026, 3:09 am IST
மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.
பகிர்:

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, புதன்கிழமை தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. மேட்டூா் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை குடங்களில் நிரப்பி, ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை, மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊா்வலம் தொடங்கி, ராசிபுரம் பிரதான சாலை, ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம், திருச்செங்கோடு பிரதான சாலை வழியாக கோயிலை வந்து அடைந்தது. இந்த ஊா்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.
மருளையாம்பாளையம், சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீா்த்தக் குடம் ஊா்வலம்.