செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம், செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம், செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, திங்கள்கிழமை கணபதி, நவகிரகங்கள், குபேரலட்சுமி, சுதா்சனம் ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. அதையடுத்து, பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்தனா். செவ்வாய்க்கிழமை முதல்கால யாகசாலை பூஜை, புதன்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3-ஆம் கால யாகசாலை பூஜை, வியாழக்கிழமை 4ஆம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றினா். பின்னா், பழனியாண்டவருக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement