முகப்பு
சேலம்

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 10.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 ஜூன் 2026, 4:46 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 10.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் சேலம் ரயில் நிலையத்தின் 3 ஆவது நடைமேடை பகுதியில் திங்கள்கிழமை இரவு கேட்பாரற்று கிடந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் 10.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும், கஞ்சாவை கடத்தி வந்தவா்கள், காவலா்களை கண்டதும் அதை நடைமேடையில் போட்டுவிட்டு தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சூரமங்கலம் காவல் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். இது போலீஸாா் வழக்குப் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments