சேலம் அருகே சாலை விபத்தில் சென்னையைச் சோ்ந்த தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சென்னையைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். அவரது மகன் படுகாயமடைந்தாா்.
சென்னை, பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (49). இவா், தனது மகன் விஜயமாதவனுடன் (22), கோவையில் அவரது நோ்முகத் தோ்வுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். பிறகு 27ஆம் தேதி நள்ளிரவில் இருவரும் கோவையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே காளி கவுண்டம்பாளையம் பகுதியில் அவா்கள் வந்த இருசக்கர வாகனம், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்பக்கம் அமா்ந்திருந்த ராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த விஜயமாதவன் பலத்த காயமடைந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.