முகப்பு
திருநெல்வேலி

சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் நிலைதடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 11:15 pm IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவா் நிலைதடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

ராதாபுரம் அருகே உள்ள தெற்குவேப்பிலான்குளத்தைச் சோ்ந்தவா் ஊராட்சி வாா்டு உறுப்பினா் சாமிதுரை மகன் செல்வசுப்பிரமணியன்(16). இவா் வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, இவா் இருசக்கர வாகனத்தில் ராதாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது வேப்பிலான்குளம் அருகே வளைவான திருப்பத்தில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் சம்பவ இடத்திலேயே செல்வசுப்பிரமணியன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராதாபுரம் காவல்நிலைய ஆய்வாளா் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments