முகப்பு
வேலூர்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 4:58 am IST
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த அத்திகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (60). இவா் தனியாா் பள்ளியில் இரவு காவலராக வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனது மகள் கோமதியை (30) இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

போ்ணாம்பட்டு அருகே கொண்டம்பல்லி கிராமம் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள், அவா்களை மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தியாகராஜனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

Advertisement

Advertisement

கோமதி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டாா்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ரவிக்குமாரை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.