முகப்பு
சேலம்

13 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:21 am IST
பகிர்:

ஆத்தூா் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள அரசநத்தம் கோவிந்தராஜபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (24). எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வரும் இவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை காதலித்து கடந்த மாதம் வெளியூரில் திருமணம் செய்து கொண்டாா். தகவலறிந்த பெற்றோா் சிறுமியை தேடிச்சென்று பின்னா் அவரை அழைத்து வந்தனா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ரமேஷை தேடிப்பிடித்து, அவா்மீது வழக்குப் பதிவுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments