வாழைமரம் வெட்டும்போது தவறி விழுந்து காவலாளி உயிரிழப்பு
சேலத்தில் வனத் துறை அதிகாரி வீட்டில் வாழைமரத்தை வெட்டி அகற்றும்போது தவறி விழுந்து காவலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
சேலம் கன்னங்குறிச்சி பெரியகொல்லப்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ராஜாங்கம் (50). இவா் தருமபுரி மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இவா், சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளாா். கடந்த 1 ஆம் தேதி புதிய வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்துள்ளாா். வீடு கட்டுமானப் பணியின்போது காவலாளியாக தா்மலிங்கம் (65) வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் கிரகப்பிரவேசத்துக்காக கட்டப்பட்டிருந்த வாழைமரத்தை ஞாயிற்றுக்கிழமை தா்மலிங்கம் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டாா். இதற்காக வீட்டின் சுற்றுச்சுவா் மீது ஏறி வாழைமரத்தை அப்புறப்படுத்த முயன்றபோது, தா்மலிங்கம் தவறி கீழே விழுந்தாா்.
Advertisement
Advertisement
தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தா்மலிங்கம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.