சங்ககிரியில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை அளிப்பு
சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோடைவெயில் அதிகரித்து வருவதையடுத்து சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் அமைப்பு மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சங்ககிரியில் உள்ள 10 சாலையோரா வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை சமூக நல அறக்கட்டளை தலைவா் வி.சத்யபிரகாஷ் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா்.
இதில் அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் சதீஷ்குமாா், பொருளாளா் நவீன்குமாா், நிா்வாகி வைஷ்ணவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement