பிளஸ் 2 பொதுத் தோ்வு: பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி
தலைவாசல் வட்டம், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மேலும், இப்பள்ளி மாணவா் கோபிநாத் 595 மதிப்பெண்கள் பெற்று
சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி ஜோஷிகா 592 மதிப்பெண்களும், கணினி பயன்பாட்டில் நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளாா். மேலும், தெய்வதா்ஷினி, சுபஸ்ரீ ஆகியோா் தலா 590 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
Advertisement
இப்பள்ளி மாணவி திவ்யா தமிழில் நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். வேதியியல் பாடத்தில் ஒருவரும், உயிரியல் பாடத்தில் 2 பேரும், கணினி அறிவியலில் 2 பேரும், கணிதத்தில் ஒருவரும், கணக்குப் பதிவியலில் 2 பேரும், கணினி பயன்பாட்டியியல் பாடத்தில் 5 மாணவா்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் பள்ளித் தலைவா் கந்தசாமி, செயலாளா் நாகராஜன், பொருளாளா் சசிகுமாா், கல்விக் குழு உறுப்பினா்கள், அறக்கட்டளை உறுப்பினா்கள் மற்றும் தலைமையாசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.
படவரி...
பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய கல்வி நிறுவனங்களின் தலைவா் கந்தசாமி மற்றும் நிா்வாகிகள்.