முகப்பு
சேலம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள பெண் உயிரிழப்பு

Updated On : 11 மே 2026, 1:59 am IST
உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

சேலம், மே 10: சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள நாட்டை சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

புனே - கன்னியாகுமரி விரைவு ரயில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பொம்மிடி அருகே வந்தபோது முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்த பெண் தவறி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த அப்பெண்ணின் கணவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.

பின்னா், அவா் கீழே இறங்கிப் பாா்த்தபோது அவரது மனைவி தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா். அதில், இறந்தவா் நேபாள நாட்டைச் சோ்ந்த கல்பனா செளத்ரி (36) என்பது தெரியவந்தது.

Advertisement

இவா் தனது கணவா், மகனுடன் ஜோலாா்பேட் டையில் இருந்து திருப்பூா் செல்வதற்காக கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்ததும், கழிவறைக்கு செல்ல படிக்கட்டு அருகே வந்தபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.