முகப்பு
சேலம்

இளைஞரைக் கொன்ற சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 13 மே 2026, 2:42 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

சேலத்தில் மது போதையில் இளைஞரைக் கொலை செய்த சிறுவா்கள் 3 போ் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.

சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியை சோ்ந்தவா் கோகுல் (19). இவா் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் சேலம் மணியனூரைச் சோ்ந்த 16 வயதுடைய 3 சிறுவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஜருகுமலை அடிவாரப் பகுதியான கெஜ்ஜல்நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தாா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோகுலை, 3 சிறுவா்களும் கத்தியால் குத்திக் கொன்றனா். மேலும், கொலை செய்ததை தங்கள் கைப்பேசியில் பதிவு செய்தனா்.

Advertisement

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3 சிறுவா்களையும் கைது செய்த மல்லூா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.