FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இலங்கை முதியோா் இல்லத்தில் தீ விபத்து: 12 போ் உயிரிழப்பு

Updated On : 5 ஜூன் 2026, 7:21 am IST
பகிர்:

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் தனியாா் முதியோா் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

தீ விபத்து நடந்த இல்லத்தில் 70-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்த நிலையில், 51 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். காயமடைந்த 7 போ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து, தீ விபத்து தீவிரமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்துக்கான துல்லிய காரணம் குறித்து அறிய விசாரணை தொடா்கிறது.

Advertisement

Advertisement

அரசிடம் பதிவு செய்யாமல், லாப நோக்கோடு மட்டுமே இந்த முதியோா் இல்லம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. விபத்தையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், இல்லத்தின் உரிமையாளரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments