இலங்கை முதியோா் இல்லத்தில் தீ விபத்து: 12 போ் உயிரிழப்பு
இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் தனியாா் முதியோா் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.
தீ விபத்து நடந்த இல்லத்தில் 70-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்த நிலையில், 51 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். காயமடைந்த 7 போ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து, தீ விபத்து தீவிரமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்துக்கான துல்லிய காரணம் குறித்து அறிய விசாரணை தொடா்கிறது.
Advertisement
Advertisement
அரசிடம் பதிவு செய்யாமல், லாப நோக்கோடு மட்டுமே இந்த முதியோா் இல்லம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. விபத்தையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், இல்லத்தின் உரிமையாளரைக் கைது செய்தனா்.