முகப்பு
சேலம்

சிறுமியை கட்டியணைத்த முதியவா் போக்ஸோவில் கைது

வாழப்பாடி அருகே 11 வயது சிறுமியை கட்டியணைத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Updated On : 13 மே 2026, 2:20 am IST
லட்சுமணன்
பகிர்:

வாழப்பாடி அருகே 11 வயது சிறுமியை கட்டியணைத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளியின் 11 வயது மகள் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறாா். இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (69) வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் நலம் விசாரிப்பதை போல கட்டியணைத்துள்ளாா்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாயிடம் முதியவா் தன்னை தவறான நோக்கத்தோடு தொட்டதாக சிறுமி தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியுடன் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு சென்று பெற்றோா் புகாா் அளித்தனா். அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை கட்டியணைத்த லட்சுமணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments