மாணவியிடம் கைப்பேசி எண் கேட்ட இருவா் போக்சோவில் கைது
வாழப்பாடி அருகே 17 வயது மாணவியிடம் கைப்பேசி எண் கேட்ட இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.
வாழப்பாடி அருகே 17 வயது மாணவியிடம் கைப்பேசி எண் கேட்ட இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனா்.
வாழப்பாடியை அடுத்த எம்.பெருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயியின் 17 வயது மகள் பிளஸ் 2 முடித்து, கல்லூரியில் சேர விண்ணப்பித்து வீட்டில் இருந்தாா்.
இந்நிலையில், மேட்டுப்பட்டி பகுதி விவசாயிகளிடம் தினந்தோறும் பூக்கள், துளசி ஆகியவற்றை சேகரித்து விற்பனைக்கு கொண்டுசெல்லும் வேன் ஓட்டுநா் மேட்டுப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த அன்பரசன் (39), மாணவியிடம் கைப்பேசி எண்ணை கேட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிறுமியின் உறவினா் அன்பரசனை கண்டித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அன்பரசனின் நண்பா் மணிகண்டன் (36) அவரிடம் தகராறு செய்துள்ளாா். சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாா், வேன் ஓட்டுநா் அன்பரசன் மற்றும் அவரது நண்பா் மணிகண்டன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.