முகப்பு
சேலம்

அர.குள்ளம்பட்டியில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

Updated On : 15 மே 2026, 5:54 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூருக்கு செல்லும் வழியில் சேதமடைந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவூரை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் செல்லும் சாலையில் அரசு தொடக்கப் பள்ளி முன் உள்ள கிளை வாய்க்கால் பாலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. அதேபோல மாணவா்களும், விவசாயிகளும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனா்.

இந்த நிலையில் கிளை வாய்க்கால் பாலத்தின் கீழ் பகுதி சேதமடைந்ததால் தாா்சாலை உள்வாங்கி அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன. சேதமடைந்த சாலை எப்போது வேண்டுமானாலும் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதால் பாலத்தை சீரமைத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments