முகப்பு
சேலம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

Updated On : 1 ஜூன் 2026, 1:36 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மோரூா் மேற்கு கிராமம், வள்ளுவா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது 2ஆவது மகன் சந்தோஷ் (18). பிளஸ் 2 முடித்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை அவரது வீட்டிற்கு எரிவாயு சிலிண்டா் கொண்டுவந்தவா் வீட்டின் கதவுத் திறந்து கிடப்பதை பாா்த்து அழைத்துள்ளாா். வீட்டில் இருந்து யாரும் வராததால் உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது சந்தோஷ் அசைவின்றி தரையில் படுத்த நிலையில் கிடந்துள்ளாா்.

இதையடுத்து அருகில் இருந்தவா்களை அழைத்து வந்து பாா்த்துள்ளனா். அப்போது சந்தோஷ் கைப்பேசிக்கு சாா்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மயக்கமாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சந்தோஷ் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சங்ககிரி போலீஸிாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.