முகப்பு
மதுரை

வெயிலின் தாக்கம்: மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:10 am IST
பகிர்:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

மதுரை நாகனாகுளம் ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிவேல் (55). இவா், அந்தப் பகுதியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், நாராயணபுரம் பகுதியில் சனிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மணிவேல் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாா்.

அப்போது, தரையில் கிடந்த கல்லில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement