முகப்பு
மதுரை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:33 AM
பகிர்:
Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:09 AM

மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை கிழக்கு, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இரு பேரவைத் தொகுதிக்கும் தனித் தனியே அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காப்பறை, தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

Advertisement

பின்னா், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரகாலத் தேவைக்கான நடவடிக்கைகள், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.