காவிரி பிரச்னை: திண்டுக்கல்லில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூ. கட்சியினர் 70 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திண்டுக்கல்லில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திண்டுக்கல்லில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்திலிருந்து மாவட்டக் குழு செயலர் த.சந்தானம் தலைமையில் கட்சியினர் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இப்போராட்ட அறிவிப்பால், திண்டுக்கல் ரயில் நிலையம் முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே ரயில் மறியலுக்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள் ரயில் நிலையம் முன்புள்ள சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்டச் செயலர் சந்தானம், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.என்.மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுதந்திரதேவி, மணிகண்டன், ரவி உள்ளிட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி: இதே கோரிக்கையை வலியுறுத்தி தேனி- பெரியகுளம் சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் பெத்தாட்சி ஆஸாத் தலைமை வகித்தார்.அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 48 பேரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.