முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் எம்ஜிஆர் நினைவு தினம்

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:28 am IST
பகிர்:

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
    இதையொட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய அதிமுக சார்பில், பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
     இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக ஒன்றியச் செயலர் பி. பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. குப்புச்சாமி, நகரச் செயலர் உதயம் ராமசாமி, தேவி குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
     இதேபோல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக சார்பில், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய மேற்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் அமமுக நகரச் செயலர் தங்கதுரை, ஒன்றியச் செயலர்கள் சந்திரன், சண்முகவேல், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் ஜமாலுதீன் உள்பட அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments