சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்
பழனியை சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.
பழனியை சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.
பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் சின்னப்பராஜ் மகன் விஜயராஜ் (43). இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு ஐஸ்வர்யா (8) என்ற மகள் உள்ளார். விஜயராஜ் சின்னத்திரை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் என ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் பழனி வந்த விஜயராஜ் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் இறந்தார்.
அவரது உடலுக்கு ஏராளமான உறவினர்கள், சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் உள்பட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஞாயிற்றுக்கிழமை மாலை இவரது உடல் ராமநாத நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.