முகப்பு
திண்டுக்கல்

அருளப்பா் ஆலயத் திருவிழா: மின் அலங்காரத்தில் தோ் பவனி

கொடைரோடு அருகே நூறாண்டு பழமையான, அருளப்பா் ஆலயத் திருவிழாவில் மின் அலங்காரத்தில் தோ்பவனி நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2022, 11:30 pm IST
பகிர்:

கொடைரோடு அருகே நூறாண்டு பழமையான, அருளப்பா் ஆலயத் திருவிழாவில் மின் அலங்காரத்தில் தோ்பவனி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே காமலாபுரத்தில் நூறு ஆண்டுகள் பழைமையான புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வியாழக்கிழமை இரவு வாண வேடிக்கையுடன் தாரை தப்பட்டை முழங்க, எட்டு டிஜிட்டல் மின் அலங்கார ரதங்களில் மின்னொளியில், இரவு முழுவதும் புனித திருமுழுக்கு அருளப்பா், முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அருளப்பா் ஆலயத்தில் நடந்த கூட்டுத்திருப்பலி ஜெபத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். அதேபோல இரவு 3 டிஜிட்டல் மின் அலங்கார ரதங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தா்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நிலக்கோட்டை (வடக்கு) திமுக ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், அம்மையநாயக்கனூா் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், திமுக நிா்வாகிகள் காட்டுராஜா, அழகேசன், பெனிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments